ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இது நீலகிரி மாவட்டத்தின் வாடிக்கையான காலநிலை. இந்நிலையில், மிகவும் தாமதமாக இந்த முறை கடந்த 2 நாட்களுக்கு முன் உறைபனி விழுந்தது. பொதுவாக துவக்கத்தில் ஓரிரு நாட்கள் விழும். பின், ஜனவரி மாதங்களிலேயே பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக நீலகிரியில் உறைபனியின் தாக்கம் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி கொட்டியது.