சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகாரில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா இருந்த போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய அதிமுக அரசு அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.கலையரசன் விசாரணையை எதிர்த்து சூரப்பா தொடர்ந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.