தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி

 

சென்னை: தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி அளித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் 15.18 சதவீதம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் S.I.R- பணிகளுக்கு முன் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் S.I.R- பணிகளுக்கு பின் 5,43,76,755 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2,77,60,332 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4,19,355; மூன்றாம் பாலினத்தவர் 7,191 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

அந்தந்த வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பி.எல்.ஓ.க்களை அணுகலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

12 லட்சம் பேர் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை திரும்பி அளிக்க விரும்பவில்லை. சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் நீக்கம். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை இணையத்தில் வெளியிடப்படும். அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நாளை தங்களது பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம்.

 

 

 

Related Stories: