ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைவு ஆர்.நல்லகண்ணு, முத்தரசன் இரங்கல்

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்): எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப் வாத்தியார் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட வாத்தியார் ஜேக்கப் மறைவு இலக்கிய உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை ‘வாத்தியார்’ என்ற நாவலில் அழகுற விளக்கியுள்ளார். நெல்லை சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறை வாசத்தை மரண வாயிலில் என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் ஒரு மிகப்பெரிய எழுத்தாளுமையை இழந்து விட்டது. இறுதிவரை மூத்த தலைவர் நல்லகண்ணு மிக நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Related Stories: