சென்னை: இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு 4 அல்ல 14 சர்வதேச விமான நிலையங்கள் கேட்கும் உரிமையும் தகுதியும் உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தென் மாவட்ட எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான மனுவை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் சு வெங்கடேசன் ஆகியோர் நேரில் அளித்தனர்.