மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அமயபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். திருச்சியில் உள்ள இரும்பு கடை ஒன்றில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கண்ணம்மாள் (21), பி.காம் பட்டதாரி. இவருக்கும், உறவுக்காரரான கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 15ம் தேதி காலையில் மணப்பாறை மாண்பூண்டி நல்லாண்டவர் கோயிலில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அன்று மாலை கோயிலில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டபோது, கண்ணம்மாள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.