மணப்பாறை அருகே திருமணமான உடனே விஷம் குடித்த மணப்பெண் சாவு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அமயபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். திருச்சியில் உள்ள இரும்பு கடை ஒன்றில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கண்ணம்மாள் (21), பி.காம் பட்டதாரி. இவருக்கும், உறவுக்காரரான கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 15ம் தேதி காலையில் மணப்பாறை மாண்பூண்டி நல்லாண்டவர் கோயிலில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அன்று மாலை கோயிலில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டபோது, கண்ணம்மாள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

அப்போது கண்ணம்மாள் எலிபேஸ்ட் சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கண்ணம்மாள் இறந்தார். இது குறித்து கண்ணம்மாளின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ரங்கம் ஆர்டிஓ சிந்துஜா விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories: