பிரதமர் மோடியுடன் புடின் போனில் பேச்சு

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 6ம் தேதி டெல்லி வந்தார். அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள், குறித்து ஆலோசனை நடத்தினர். ரஷ்யாவிடமிருந்து ஏகே203 ரக துப்பாக்கி கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், புடின் நேற்று மோடியுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது, கடந்த 6ம் தேதி ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இந்திய அரசு வழங்கிய உற்சாக உபசரிப்புக்கு புடின் நன்றி கூறியதாவும், உச்சி மாநாட்டின் இடையே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்து  பேசியதாக ரஷ்ய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: