சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் இலங்கைக்கு புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் அமெரிக்க டாலர், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 7 பேரிடமிருந்தும் ரூ.42.18 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர்.
