போச்சம்பள்ளி : பொங்கல் பண்டிகையினை எதிர்நோக்கி போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில், விவசாயிகள் அதிகளவு கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கரும்பு அமோகமாக விளைந்துள்ளது. போச்சம்பள்ளியில் இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், கரும்புகளை தோகை உரித்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா காரணமாக வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் கரும்புகளை கேட்ட விலைக்கு கொடுத்தனர்.