உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்களை அகற்றி, அந்நிலங்களை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர். உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்புலியூர் கிராம ஏரிக்கரை அருகே அரசுக்கு சொந்தமான நீர்நிலை பகுதிகளை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். புகாரின்பேரில் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.