பேராவூரணி ஒன்றியத்தில் மயான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் பொது மயான சாலையை மேம்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் பொது மயானம் மற்றும் ஆற்றங்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதில் தினசரி ஆற்றங்கரை செல்லும் பொதுமக்களும் இறப்பு நேரங்களில் மயானத்துக்கு சடலம் தூக்கி வருபவர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

இதுகுறித்து கடந்த ஆட்சியில் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒன்றிய நிர்வாகம் மயான சாலையை சீரமைத்து, மயானம் செல்லும் பாதையில் போக்குவரத்துக்கு இடையூராக கொட்டப்படும் குப்பைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: