சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொட்டாஷ் உரம் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 50 கிலோ பொட்டாஷ் மூட்டை ஒன்றுக்கு ரூ1040க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வந்துள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே சமயத்தில் மூட்டைக்கு ரூ660 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விவசாயம் செய்து வரும் நிலையில் பொட்டாஷ் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.