மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை சர்ச்சையாக உள்ளது. விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2018ம் ஆண்டில் இருந்து 7 பேர் விடுதலை சர்ச்சையாக உள்ளது. விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.