பிளஸ் 2 தேர்வில்: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் மேலசேத்தியை சேர்ந்தவர் செல்லப்பா. விவசாயி. இவரது மனைவி சவிதா. இவர்களது இரட்டை குழந்தைகள் நிர்மல், நிகில். இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர்.

பிளஸ் 2 பொது தேர்வு எழுதியிருந்தனர். நேற்று ரிசல்ட் வெளியானது. இதில், கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இந்த இரட்டையர்கள் இருவரும் 600க்கு 478 மதிப்பெண்கள் பெற்றனர். நிகில் தமிழில் 96, ஆங்கிலம் 87, இயற்பியல் 78, வேதியியல் 84, உயிரியல் 66, கணிதம் 67, நிர்மல் தமிழில் 95, ஆங்கிலத்தில் 78, இயற்பியல் 76, வேதியியல் 69, உயிரியல் 87, கணிதம் 73 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த இரட்டை சகோதரர்கள் பிளஸ் 2வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். இருவரும் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

The post பிளஸ் 2 தேர்வில்: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் appeared first on Dinakaran.

Related Stories: