அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், இறந்துபோன முதியவர் ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (66) என்பது தெரியவந்தது. இதுபோல் நேற்று முன்தினம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் கத்திரி வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
The post திருத்தணி பேருந்து நிலையத்தில் வெயில் உக்கிரத்தால் முதியவர் சுருண்டு விழுந்து பரிதாப பலி appeared first on Dinakaran.