டெல்லி: முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து இன்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன.