சென்னை: திரைப்பட இயக்குனர் எம்.தியாகராஜன் மரணம் அடைந்தார். அவரது சடலம், சாலையோரம் அனாதையாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரித்த மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன். அருப்புக்கோட்டையை சேர்ந்த இவர், திரைப்பட கல்லூரியில் டைரக்ஷன் கற்றவர். பட வாய்ப்பு இல்லாததால் சொந்த ஊருக்கே சென்றார். அப்போது விபத்தில் சிக்கி, கோமா நிலைக்கு சென்றார். பிறகு குணமாகி, மீண்டும் திரைப்படம் இயக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.