சென்னை : ஆவடியில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மோதலில் ஈடுபட்டது ஆவடி காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் என தெரியவந்துள்ளது. அந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆவடி பேருந்து பணிமனையில் நின்ற போது திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.