மியான்மர்: மியான்மர் நாட்டின் ஜனநாயக கட்சி தலைவர் ஆங்சாங் சூ கி தலைமையிலான ஆட்சியை கடந்த பிப்ரவரியில் அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. தற்போது, ஆங்சாங் சூ கி, ராணுவத்தால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ராணுவம் அறிவித்தது. இதற்கிடைய ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கை மியான்மர் நீதிமன்றம் விசாரித்தது. அவருக்கு இன்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.