மதுரை: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் கணினி மையம், நீதிமன்ற அலுவலர் உறைவிடம் திறப்பு விழா மற்றும் சட்ட நாள் கொண்டாட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ‘நீதித்துறையின் கட்டமைப்புகளும், நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளன. இதை அரசு சரி செய்யும் என நம்புகிறோம். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அதனுடன் நாமும் பயணிக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை சிறப்பாக செயல்படுகிறது’ என்றார். கணினி மையத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘கடந்த 2005ல் மத்திய அரசு நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது. 2013ல் நீமன்றத்தில் இணைய வழி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015லும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.