ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கல்லூரி மாணவன் மணிகண்டன்(20) திடீரென மரணமடைந்துள்ளார். மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மாணவன் உயிரிழந்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி மணிகண்டன் கிடந்ததால் 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.