பேருந்து நிறுத்தத்தில் 3 பேருக்கு சரமாரி வெட்டு

அம்பத்தூர்:  கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவுடி அரவிந்தன்(24), கடந்த 2018ம் ஆண்டு  வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருமுல்லைவாயல் மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ்(25), கொரட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரசாந்த்(27), அவரது தம்பி மணி(25) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று காலை ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர், அங்கிருந்து மாநகர பேருந்தில் பாடிக்கு வந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த அரவிந்தனின் தந்தை ரவி(65), சகோதரர்கள் அப்புன்ராஜ்(32) விவேக்(30) ஆகியோர் பாடி பஸ் நிறுத்தம் வந்து  ரவி, அப்புன்ராஜ், விவேக் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மூவருக்கும் பலத்த காயம் வெட்டு ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதனை பார்த்த ரவி, அப்புன்ராஜ், விவேக் மூவரும் தப்பி ஓடினர். தகவலறிந்த கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: