செந்துறை : செந்துறை அருகே இராயம்புரம் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படும் ஏரியில் மர்மமான முறையில் மீனகள் செத்து மிதந்தது. இதனை உடனே இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். ஏரி நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள இராயம்புரம் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆலங்குளம் எனும் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழையால் ஏரிநிரம்பி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கி வருகின்றன.