சென்னை: புழல்-மதுரவாயல் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயது சிறுவன் தனீஸ்வரன் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தாய் தேவி படுகாயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.