திருத்தணி: கனமழையால் திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள அமிர்தாபுரம் ஏரியில் மழைநீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், அமிர்தாபுரம் திருவள்ளூர் சேர்ந்தவர் வினோத்குமார். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா(25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று வீட்டில் சீமந்த நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் தீபாவின் தாய் வீட்டுக்கு அவரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தது.