திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் சஜி மோன்(44). திருவல்லா கோட்டாளி மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளராக உள்ளார். அதே கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இளம்பெண் ஒருவர், மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் கோட்டாளி கிளை செயலாளர் சஜிமோன், டிஒய்எப்ஐ நாசர் ஆகிய 2 பேரும் பத்தனம்திட்டாவில் ஒரு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை காரில் அழைத்து சென்றனர். அப்போது காரில் வைத்து நாசர் ஜூஸ் கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்தது எனக்கு தெரியாது.