ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீமகா கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பைரவர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டி கலச ஸ்பான நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள், பின்னர் 64 கலச பைரவ ஆராதனை, 64 பைரவ ஹோமம் பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 7 மணிக்கு பெருமாள் கோயிலிலிருந்து ஆபரணப்பெட்டியில் வெள்ளி கவசம் எடுத்துக்கொண்டு, திருக்குடை ஏந்தி, பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.