சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதாக தகவல் அறிந்தேன் எனவும், இயற்கையை வெல்ல இயலாது என மக்கள் அறிவர் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். இந்த அசாத்தியமான சூழ்நிலையிலும் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் பணியை திறம்பட கையாளுவர் என நம்பிக்கையளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.