புதுடெல்லி: ‘தொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறி வரும் கங்கனாவை சிறையில் அடையுங்கள். இல்லை என்றால், அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்கள்’ என்று சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டத்துடன் கூறியுள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், சமீபத்தில் நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பாகவும், மகாத்மா காந்தி குறித்தும் ேபசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. தற்போது ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியுள்ள கங்கனா, ‘காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷூவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளை காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒருவர் அவர்களுக்கு தேவை’ என்று கருத்து பதிவிட்டிருந்தார்.