தண்டையார்பேட்டையில் வீட்டு திண்ணையில் தூங்கிய மூதாட்டி எரித்து கொலை?...போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் வீட்டு திண்ணையில் தூங்கிய மூதாட்டி மர்மமான முறையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததால், அவரை யாரேனும் எரித்து ெகான்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை சிவாஜி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் யேகத்தம்மாள் (76). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், மூத்த மகள் இறந்து விட்ட நிலையில், பேரன் வீட்டில் யேகத்தம்மாள் வசித்து வந்தார். இவர், தினமும் இரவில் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் தூங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு யேகத்தம்மாள் திண்ணையில் படுத்து தூங்கினார்.

நேற்று காலை பேரன் வெளியே வந்து பார்த்தபோது, பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி தூங்குவதற்கு முன்பு, மெழுகுவர்த்தி ஏற்றி மாதாவை வழிபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. அதன்படி மெழுகுவர்த்தி ஏற்றியபோது, சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி இறந்தாரா அல்லது, யாராவது அவரை எரித்து கொன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: