தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், நியூ ஆவடி சாலை அருகே கடந்த 2022ம் ஆண்டு, வில்லிவாக்கத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி டபுள் ரஞ்சித் படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில் ரவுடி உதயகுமார் முதல் குற்றவாளியாக உள்ளார். தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழிக்கு பழியாக மர்ம கும்பல், உதயகுமாரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து இன்று காலை 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மர்ம கும்பலை பிடிப்பதற்கு 3 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post வில்லிவாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம்; பிரபல ரவுடி கத்தியால் சரமாரி வெட்டி கொலை: பழிக்கு பழியா? 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.