புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தனது அண்ணன் போன்றவர் என்று சித்து கூறியுள்ளா்ர். பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்துக்கு செல்வதற்கான கர்தார்பூர் வழித்தடம் , 20 மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது. யாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் நேற்று முன்தினம் அமைச்சர்களுடன் சென்று இங்கு வழிபட்டர். இதைத் தொடர்ந்து, இந்த மாநில காங்கிரஸ் தலைவர் சித்து நேற்று சென்று குருத்வாராவில் வழிபட்டார். அவருக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பாக உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். குருத்வாராவில் வழிபட்ட பின் சித்து அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எனக்கு அண்ணன் போன்றவர்,’ என்று கூறினார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.