பலமு: காரில் சென்று கொண்டிருந்த ஜார்க்கண்ட் பாஜக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஜக இளைஞரணி அமைப்பின் ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட பொருளாளர் சுமித் ஸ்ரீவத்சவா, தேசிய நெடுஞ்சாலை எண்: 98ல் காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் அப்பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு அருகே கிடந்தது. தகவலறிந்த போலீசார் சுமித் ஸ்ரீவத்சவாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.