மும்பை: ‘ஃபிட்னஸ்’ நிறுவன முதலீடு விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது செக்ஸ் ஆப்ஸ் தயாரித்து வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் நிதின் பராய் என்பவர், ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, எஸ்எஃப்எல் ஃபிட்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் காசிப் கான் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதில், ‘ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் உடற்பயிற்சி மையத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்ய கோரினர். அதில் வரும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறினர்.