திருவாரூர்: டெல்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் பல லட்சம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களில் வலைபோட்டு மீன் பிடிக்கும் அவலமும் அரங்கேறியுள்ளது. எந்த ஒரு இயற்கை சீற்றமாழினும் அதில் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொக்கலாடி என்ற கிராமத்தில் மட்டும் 1,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வலை போட்டு மீன் பிடிக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இளம் தளிர்கள் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்ததாக பல செய்திகள் வெளியாகின.