பொன்னை : காட்பாடி தாலுகா, பொன்னை மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொன்னை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த பருவமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஏரி நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போனதால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.