சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், கட்சியினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே இன்று(நேற்று) கமலாலயத்தில் நடைபெறுவதாக இருந்த நகர்ப் புற உள்ளாட்சி விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது பின்னர் முறையாக தேதி அறிவிக்கப்பட்டு நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.