மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கள்ளப்பட்டி காலனி எனப்படும் முத்தையாபுரம் கிராமத்தில் 90-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. 2 தெருக்களை மட்டுமே கொண்ட இந்த கிராமத்தில் சாலை, கல்வி நீர் வசதியின்றி இருப்பதாக கூறுகின்றனர். வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் தெருக்களில் தேங்கி கிடப்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.