இந்த மலர் கண்காட்சி 20ம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. பூங்காவில் புதிதாக சில மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. 17 நாட்களாக நடந்த மலர் கண்காட்சியை 2 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் மேலும் சில நாட்கள் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
The post ஊட்டியில் 17 நாள் மலர் கண்காட்சி நிறைவு 2.41 லட்சம் பேர் கண்டு களித்தனர் appeared first on Dinakaran.