சில இடங்களில் ரோந்து பிரிவு போலீசார் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே கோட்டக்குப்பம் முதல் திண்டிவனம் வரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐ பூமிநாதன், ஏட்டு அப்துல் ரகுமான் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருவரையும் உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.
The post வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ வைரலானதால் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்: விழுப்புரம் எஸ்பி நடவடிக்கை appeared first on Dinakaran.