இந்நிலையில் தற்போது தென் மேற்கு பருவகாற்று பலமாக வீசி வருவதால், கடந்த 3 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,111 மெகாவாட்டை எட்டியுள்ளது. இந்த சீசனில் அதிக பட்ச காற்றாலை மின் உற்பத்தி இதுவாகும். காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க கூடிய 562 மெகாவாட் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுத்து வருவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என கூறப்படுகிறது.
The post காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு: 4 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது appeared first on Dinakaran.