இந்தியா அத்தியாவசிய பணிகள் மிகவும் முக்கியம்!: புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!! May 31, 2021 தில்லி உயர் நீதிமன்றம் தில்லி மத்திய விஸ்டா பாராளுமன்ற கொரோனா தின மலர் டெல்லி: புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா 2வது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நெருக்கடியான சூழலிலும் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்டட தொழிலாளர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் கட்டட பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் முறையிடப்பட்டிருந்தது. இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதிசிங் அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 17ம் தேதி நிறைவுபெற்றதை அடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. சென்ட்ரல் விஸ்டா கட்டட பணி, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உள்நோக்கத்துடன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் அன்யா மல்கோத்ரா, சோஹில் ஹஸ்மி ஆகியோருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். … The post அத்தியாவசிய பணிகள் மிகவும் முக்கியம்!: புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.
பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் பளார்: சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு
அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு, வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
காலியாகிறது அஜித்பவார் கூடாரம் 19 எம்எல்ஏக்கள் சரத்பவார் கட்சிக்கு தாவ திட்டம்: மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு
பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார்
சொத்து குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமை தோறும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஜெகன்மோகன்
உ.பியில் 16 தொகுதியில் வெல்ல பாஜவுக்கு கைகொடுத்த மாயாவதி: வாக்குகளை பிரித்து வெற்றிக்கு உதவியது அம்பலம்
பாஜவினர் ராமரின் உண்மையான சீடர்கள் இல்லை ராமரின் பெயரால் மோடி மக்களை ஏமாற்றி விட்டார்: சமாஜ்வாடி எம்.பி. கடும் தாக்கு
கடும் பனிப்பொழிவு, மோசமான வானிலை உத்தரகாண்ட் மலையேற்றத்தில் பலியானமேலும் 4 பேர் சடலங்கள் மீட்பு: பெங்களூருவை சேர்ந்தவர்கள்
கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்; முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு நிதிஷ்குமார் கடும் நெருக்கடி