நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு காவல்துறை அவகாசம் கூறியதை அடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடித்தது. வழக்கில் தொடர்புடைய சயான், ஜங்க்ஷிர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர், மேல் விசாரணைக்கு அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தார்.