திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஏரிப்பாளையம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியுடன் உள்ளே நுழைந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.