பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த திருத்தணி ஆர்டிஓ தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி விஸ்வநாதன் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பதவி வகித்து வருகிறார். ஒன்றியத்தில் உள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இறந்தார். இதனால், மொத்தமுள்ள 11 கவுன்சிலர்களின் திமுகவை சேர்ந்த 4 பேர், அதிமுகவை சேர்ந்த 3 பேர், தேமுதிக, காங்கிரசில் தலா ஒருவர் என 9 பேர் ஒன்றிய குழு தலைவர் மீது அதிருப்தியடைந்து திருத்தணி ஆர்டிஓ சத்யாவை சந்தித்து, ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தனர்.