மகளை பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை

நாகை: மயிலாடுதுறையை சேர்ந்த கார் டிரைவர் அபுல்கலாம்(40). இவர், 2020ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின்பேரில் அபுல்கலாமை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் தீர்ப்பளித்த நீதிபதி தமிழரசி, மகளை பாலியல் பலாத்காரம் செய்த அபுல்கலாமுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அபுல்கலாம் அடைக்கப்பட்டார்.

Related Stories: