ஜனாதிபதியுடன் ரஜினி சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த 67வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி பங்கேற்கவில்லை. துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு விருதை வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட ரஜினி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்ததுடன், விருது பெற்றதற்காக அவரிடம் வாழ்த்தும் பெற்றார்.

Related Stories: