இளம்பிள்ளை: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பகுதியில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் ஓடி உள்ளார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த பையில், கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தப்பக்குட்டை பகுதியை சேர்ந்த பொன்னுவேல் (52) என்பதும், அவரும் மாட்டையாம்பட்டியை சேர்ந்த சதீஷ்(30), சங்ககிரி ஒலக்கசின்னனூர் சின்னத்தம்பி(29) ஆகியோரும் சேர்ந்து, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.