திருவள்ளூர்: மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.