சென்னை: அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,060 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 129 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வர்களின் ஊரில் இருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட அரசு பாலிடெக்னீக் விரிவுரையாளர் தேர்வை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.